காரை ஏற்றி நாய் குட்டிகளை கொன்றதாக கூறப்படும் பெண் கைது!


காரை ஏற்றி நாய் குட்டிகளை கொன்றதாக கூறப்படும் பெண் கைது!


நுவரெலியா – மத்துரட்ட பகுதியிலுள்ள பிரதான வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய் குட்டிகள் மீது, காரை ஏற்றி கொன்றமை தொடர்பில் 

மத்துரட்ட பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது*


*வேண்டுமென்று இரண்டு நாய் குட்டிகள் மீது வாகனத்தை ஏற்றி கொன்றுள்ளதாக மேலும் இம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


* கடந்த 14ம் திகதி வீதியில் விளையாடிக் கொண்டிருந்த நாய் குட்டிகள் மீது மத்துரட்ட பகுதியில் பயணித்த கார் ஒன்றின் சாரதி வேண்டும் என்றே காரை ஏற்றுவது போன்ற CCTV காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதென்பதும் குறிப்பிடத்தக்கது.*


*இதையடுத்தே, குறித்த காரின் சாரதிக்கு எதிராக மத்துரட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.*

*இந்த முறைப்பாட்டை அடுத்து, காரை செலுத்தியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.*


*கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வலபனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.*

Comments

Popular posts from this blog

உலகின் நான்காவது பணக்கார நடிகரான 'ஷாருக்கான்'

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு